கி.மு. ஆறு அல்லது கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியர் இந்தியாவின் ஏழு மாமுனிவர்களில் (சப்த ரிஷிகள்) ஒருவராக கருதப்படுகிறார். இவர் “அகத்தியம்” என்ற முதன் முதல் தமிழ் இல்லகியத்தை வழங்கியதால் “தமிழ் இல்லகியத்தின் தந்தை” எனப் போற்றப்படுவார். சித்தர்களில் மூத்த சித்தராக விளங்கிய அகத்தியரை “குறுமுனி” என்றும் அழைப்பர். (அகத்தியர் மிக குள்ளமாக விளங்கியதால் இவ்வாறு அழைக்கப்பட்டார்). சப்த ரிஷிகளில் ஒருவரகாவும், சித்தர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய அகத்தியர் அறிவியலில் என்ன சாதனை புரிந்திருக்க கூடும்? இக்கேள்விக்கான முழு விளக்கத்தையும் அறியும் முன் அகத்தியரின் சில குறிப்புகளை காணலாம்.

சித்தர்கள் சிவபெருமானின் புகழ் பரப்பும் ஞானிகள். சிவபெருமானின் புதல்வனான இந்து கடவுள் முருகப் பெருமான் சித்தர்களுக்கு குருவாக விளங்கிய அகத்தியரிடம் “சித்த மருத்துவம்” எனும் அற்புத மருத்துவ குறிப்புகளை வழங்கியதாக நம்பப்படுகிறது. எனவே அகத்தியர் வாயிலாகவே சித்த மருத்துவம் உருவாகி அனைவரையும் சென்றடைந்தது. அகத்தியர் இந்த சித்த மருத்துவத்தின் ரகசியத்தை மற்ற சித்தர்களுக்கு வழங்கி இந்தியாவின் மருத்துவ சிகிச்சையில் சித்த மருத்துவத்திற்கு வித்திட்டார். ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவம் என்ற முவ்வகை மருத்துவ முறைகளே அந்நாளில் இந்தியாவில் பின்பற்றப்பட்டது. இது தவிர யோகம், ஞானம், இசை, மருத்துவம், மொழி, ரசவாதம் போன்ற பன்முக கலைகளில் தன ஆற்றலை அகத்தியர் வெளிப்படுத்தியுள்ளார். பல துறைகளில் இவர் பெயரில் மொத்தம் புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்தியாவில் மிக முக்கிய ஞானிகளில் அகத்தியரும் ஒருவராக விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அகத்தியரின் உருவப்படத்தை காணலாம்.

அகத்தியர் எழுதிய பல்வேறு நூல்களில் “அகத்திய சம்ஹிதா” என்ற நூல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்நூலில் தான் அகத்தியர் அறிவியல் சார்ந்த குறிப்புகளை அநேக இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மிக அண்மையில் தான் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

“அகத்திய சம்ஹிதா” என்ற நூலில் அகத்தியர் மின்னூட்டத்தை ஏற்படுத்தும் மின்கல தயாரிப்பை பற்றியும் நீரை பிராணவாயு மற்றும் எரிவாயு போன்ற அனுகூறுகளாக பிரிக்க இயலும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருந்தார். அகத்தியர் வழங்கிய குறிப்புகளையும் அதிலிருந்து கிடைக்கப்பெற்ற மேற்கூறிய அறிவயல் சிந்தனைகளையும் சற்று விளக்கமாக காண்போம். முதலில் நாம் கீழ்காணும் செய்யுளை கருதிக்கொள்வோம்.

“நன்கு சுத்தம் செய்யப்பட்ட செம்புத்தகடை ஒரு கலயத்தில் எடுத்துக்கொள்க. அத்தகடில் மயில்துத்தத்தை முதலில் இடவும். பின் ஈரமான மரத்தூள்களை சேர்க்கவும். பாதரசம் ஒருங்கிணைந்த துத்தநாக தாளை மின்னூட்டம் சிதறாமல் இருப்பதற்காக மரத்தூளின் மேல் வைக்கவும். இப்பொருட்களின் தொடர்பினால் ஏற்படும் ஆற்றலை மித்ரா-வருணா என இரு பெயர்களை கொண்டு அழைக்கலாம். இந்த மின் ஆற்றல் நீரை பிராணவாயு, உதாணவாயு என இரு வாயுக்களாக பிரிக்கும். நூறு கலயங்களை ஒரு சேர வைத்தால் அதிக சக்தி படைத்த ஆற்றல் உருவாகும்”

இக்குறிப்பின் விளக்கத்தை ஆங்கிலத்திலும் காணலாம்.

“Place a well-cleaned copper plate in an earthenware vessel. Cover it first by copper sulfate and then by moist sawdust. After that, put a mercury-amalgamated zinc sheet on top of the sawdust to avoid polarization. The contact will produce an energy known by the twin name of Mitra-Varuna. Water will be split by this current into Pranavayu and Udanavayu. A chain of one hundred jars is said to give a very effective force”

அகத்திய சம்ஹிதா என்ற புத்தகத்தில் மேற்குறிப்பிட்ட செய்யுளை கண்டறிந்த இந்தியர்கள் இந்த குறிப்பின் உண்மையை பரிசோதிக்க முயன்றார்கள். குறிப்பாக நாக்பூரில் சமஸ்கிருத துறைத் தலைவராக விளங்கிய திரு. சஹஸ்ரபுத்தே என்பவர் அகத்தியரின் குறிப்பை கண்டு அதனை பரிசோதிக்க நாக்பூரில் பொறியியல் பேராசிரியராக விளங்கிய திரு.ஹோல் என்பவரிடம் இப்பணியை ஒப்படைத்தார். இதன் பேரில் திரு. ஹோல் தனது நண்பருடன் செய்யுளுக்கான சரியான அர்த்தத்தை உணர்ந்து பரிசோதித்து பார்த்தார். அப்பரிசோதனையில் அகத்திய கூறியவாறே மின்னூட்டம் ஏற்பட்டு மின்சாரம் பாய துவங்கியது. மேலும் இதில் உருவான மின்னூட்டம் திறந்த மின் சுற்றில் 1.38 மின்னழுத்த அளவையும், குறுக்கு மின்சுற்றில் 23 மில்லி ஆம்பியர்கள் மின்னழுத்த அளவையும் பெற்றிருந்தது. அகத்தியர் வழங்கிய மின்னூட்ட முறையை விளக்கும் படத்தை காணலாம்.

இதனால் அகத்தியர் உரைத்த செய்யுள் உண்மையென தெரியவந்துள்ளது. அகத்திய சம்ஹிதா நூலில் அமைந்த வேறொரு செய்யுளை காணலாம்.

இச்செய்யுளில் அகத்தியர் நூறு கலயங்களை வைத்து மேற்கூறிய முறையை பின்பற்றினால், நீரானது பிராணவாயுவாகவும், மிதக்கும் எரிவாயுவாகவும் பிரிந்த நிலையில் காணப்படும் என்று தெரிவித்துள்ளார். இக்கருத்தையே இன்றைய வேதியியல் பாடத்தில் நீரின் மூலக்கூறு வாய்பாடாக காண்கிறோம். ஒரு நீரின் மூல கூற்றில் இரு எரிவாயு அணுக்களும், ஒரு பிராணவாயு அணுவும் அமைந்து காணப்படும் என இன்று நாம் அறிவோம். ஆனால் இந்த செய்தியை அகத்தியர் தனது நூலில் நூறு கலயங்களை கொண்டு உருவாக முடியும் என்று கூறியது உண்மையில் வியப்பளிக்கிறது. நாம் மற்றுமொரு செய்யுளை கருதிக்கொள்வோம்.

காற்றடைத்த துணியில் எரிவாயுவை செலுத்தினால் அதனை வாயு இயக்க அறிவியலில் பயன்படுத்தலாம். அதாவது, அப்பொருளின் மூலம் காற்றில் பறக்கலாம் என்ற அறிவியல் உண்மையை அகத்தியர் நயம்பட கூறியுள்ளார்.

மேலும் இதே நூலில் அகத்தியர் செம்பை கொண்டு செயற்கை தங்கத்தை தயார் செய்யும் முறையை விளக்கியுள்ளார். அதேபோல் தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க பொருட்களுக்கு மின்சாரத்தை கொண்டு மின்முலாம் பூசும் செய்தியையும், தங்கம், வெள்ளி மற்றும் செம்பை மின்கலத்தின் மூலம் பளபளக்கும் முறையைப் பற்றியும் மற்ற மின்கலம் சார்ந்த பயன்பாடுகளையும் தெளிவாக அழகிய செய்யுள்கள் மூலம் விளக்கியுள்ளார். மினகலத்தின் மூலம் பளபளக்கும் முறையை விளக்கும் அகத்தியர் உரைத்த செய்யுளை காணலாம்.

எனவே மேற்கண்ட செய்திகளின் மூலம் அகத்தியரை உலகில் முதன் முதலில் மின்னூட்டம் சார்ந்த அறிவியலை தோற்றுவித்தவர் என கூறலாம். மின்கல சிந்தனை ஐரோப்பாவில் 1748 ல் பெஞ்சமின் பிராங்க்ளின் மூலமே அறிமுகமானது. ஆனால் இதே சிந்தனையை மிக நேர்த்தியாக அகத்திய மாமுனிவர் பல்லாயிர கணக்கான வருடங்களுக்கு முன் வழங்கி மின்னூட்டத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். அகத்தியர் வழங்கிய “அகத்திய சம்ஹிதா” என்ற அரிய நூலை பெற விரும்புவோர் Ocean Books(P)Ltd.,4/19, Asaf Ali Road, New Delhi-110 002 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book