அக்கால இந்தியர்கள் தங்களது படைப்புகளை பெரும்பாலும் வேத குறிப்புகளில் அமைத்தனர் என அறிவோம். ஆனால் அந்த வேத குறிப்புகளை ஏன் தனி நபர் பயிற்சி புரியாமல் ஒரு குழுவாக ஒரே நேரத்தில் உச்சாடனம் புரிய வேண்டும்? இந்த பழக்கத்தை இன்றளவும் ஆலயங்களிலும், சமயக் கூடங்களிலும் காணலாம். இதற்கான விடையை தேட முயன்றால் வியப்பான உண்மை புலனாகும். முதலில் ஒரு சிறிய உதாரணத்தை கருதிக் கொள்வோம். ஒரு கண்ணாடி கோப்பையில் நீர் ஊற்றி ஓர் இடத்தில் வைத்து கொள்வோம். அதன் அருகே ஒரு ஒலிப் பெருக்கி மூலம் ஒலியை உருவாக்கினால் அந்த கோப்பையில் இருக்கும் நீர் சற்று தளும்பும். ஒலிப் பெருக்கியின் ஒலியை மேன்மேலும் அதிகரித்து கொண்டே போனால் ஒரு குறிப்பிட்ட ஓலி அளவு அடையும் தருணத்தில் அந்த கண்ணாடி கோப்பை ஓலி அதிர்வு தாளாமல் உடைந்து போய்விடும். இப்பன்பை அறிஞர்கள் சோதித்து பார்த்து உண்மை என அறிந்துள்ளனர்.

அதேபோல் ஒரு குழுவில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஒரே குரலில் நேர்த்தியாக மகிமை படைத்த குறிப்புகளை உச்சாடனம் செய்யும் பொழுது ஏற்படும் அதிர்வலைகள் மிகச் சிறந்த ஆற்றலை அவ்விடத்தில் ஏற்படுத்தும். நல்ல ஆற்றல் இருந்தால் அங்கு செல்பவருக்கு நல்ல எண்ணங்கள் உருவாகும், மன நிம்மதியும், அமைதியும் நிலவும். அதேபோல் வேதக் குறிப்புகளை அனைவரும் ஒரே நேரத்தில் சரியான ஓலி அமைப்புடன் உச்சாடனம் செய்யும் பொழுது அவர்களின் இயக்கு நீர் (Hormones) சீர்படுத்தப்படும், மூளை மற்றும் ஏனைய உள்ளுறுப்புகளின் செயல்திறன் அதிகரிக்கும். இதனாலேயே வேத குறிப்புகளை உச்சாடனம் செய்து முடித்த நபருக்கு அவரது உடம்பில் ஒரு புதுத் தெம்பும், உற்சாகமும் ஏற்படுவதை உணர முடிகிறது. எனவேதான் இந்தியர்கள் கிட்டத்தட்ட 15000 ஆண்டு காலமாக இந்த வேத குறிப்புகளின் உச்சாடனத்தை இடைவிடாமல் புரிந்து வருகின்றனர். ஆனால் இதுதவிர வேறு ஏதேனும் அறிவியல் சிந்தனை இருக்கிறதா?

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்பியலாளர்கள் “String Theory” எனும் கோட்பாடை உருவாக்கினர். அதன்படி “பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அதிர்வில் ஒரு கம்பி போல இயங்குகிறது” என கருதினர். எனவே இந்த கம்பி போல் இயங்கும் பொருட்களின் அதிர்வுகளை அறிந்தால் ஒவ்வொரு பொருளின் தன்மையும் நமக்கு புலப்படும் என்பதே இந்த இயலின் அடிப்படை கோட்பாடாகும். இந்த கருத்தை விளக்கும் படத்தை கீழ் காணலாம்.

ஆனால் வேத குறிப்புகளின் உச்சாடனம் இதே அதிர்வலைகளை ஏற்படுத்தி நம்மை சீர் செய்கிறது என்ற உண்மையை பல காலம் முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தனர். ஆக, “String Theory” என்ற இந்த புது அறிவியல் சிந்தனை இந்தியாவை பொருத்த வரையில் காலம்காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு செய்தியாக விளங்குகிறது என்பதை அறியும் பொழுது நம் ஆச்சரியத்திற்கு எல்லையே இருக்காது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book